எவரெஸ்ட், மே 23 -
எவரெஸ்ட் சிகரத்தை வெள்ளிக்கிழமை தொட்ட ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த ஜேசன் பெர்னார்ட் கென்னிசன், 40, வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
சுமார் 8.849 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த அவர், அங்கிருந்து கீழே இறங்கும்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. வழிகாட்டிகள் துணையுடன் அவர் முகாம் நோக்கி வந்தார். ஆனால் கடுமையான காற்று வீசியதால் முகாமிற்கு திரும்ப முடியவில்லை.
சிறிது நேரத்திற்குள் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். எவரெஸ்ட் மலையேறுவதற்கான இந்தப் பருவத்தில் இது 10வது மரணம் என்று கூறப்படுகிறது.
அவரது உடல் இன்னும் மலையிலேயே உள்ளது. உடலை மீட்டு கீழே கொண்டு வரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கென்னிசனின் மரணம் குறித்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks